பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்

தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ற சம்பளத்தை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். அந்த சம்பள அதிகரிப்பு முறை தொடர்பில் தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், இதன்போது அவர்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

மேலும், தோட்டத் தொழிற்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையை சுட்டிக்காட்டி, இந்த விடயத்தில் அரசாங்கத்தின் அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Advertisement

Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Advertisement